Thursday, July 3, 2008

வீரப்பன்!

ஜூனியர் விகடனில் வீரப்பனைப் பற்றி மக்கள் தொலைக்காட்சியில் வந்துகொண்டு இருக்கும் தொடர் பற்றிய செய்தி படித்தேன்.

அவனை அவனுடைய சொந்தக்காரனே விஷம் வைத்துக்கொன்றான். அதன் பின் போலீஸ் அவனைச் சுட்டுக்கொன்றது என்று காண்பிக்கிறார்கள். இப்பொழுது போலீஸ் அந்த தொடர் தயாரிப்பாளரை மிரட்டிக்கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

வீரப்பன் செத்துப்போய் வருஷங்களாகி விட்டன. அவனைப்பிடிப்பதற்கு நம் அரசாங்கம் கோடிக்கணக்கில் செலவழித்திருக்கிறது. அவன் நூற்றுக்கணக்கில் யானைகளைக் கொன்றிருக்கிறான். எத்தனை மனிதர்களைக் கொன்றிருக்கிறான் - இவை எல்லாம் மறந்து போய்விட்டது. அரசியல் பண்ணுவதற்காக வீரப்பனை, நல்லவன் , அநியாயமாய் போலீஸ் கொலை செய்து விட்டது என்று 'மருத்துவர் அய்யா' போன்றவர்கள் இந்த விஷயத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். நியாயமான அரசியல் என்று வரும்?

இதற்கு நடுவில், ஹிந்தி படத்தயாரிப்பாளர் ராம் கோபால் வர்மா, வீரப்பன் மனைவியைச் சந்தித்து இருக்கிறார் - வீரப்பனைப் பற்றிய படம் எடுக்கப் போகிறாராம்! கடைசியில் வீரப்பனுக்கு சிலை வைப்பார்கள் போலிருக்கிறது!

No comments: